முட்காவேளை தனைச்
சுக்காகவே உலர்த்தி
திங்காமலே குடித்து
விக்காமலே உண்ண அருந்தல்
பேதிகளும் சயமாகவே சுரங்கள்
தயவாகவே அடங்கும்
நயமாகும் காயசித்தியும்
ஆதண்டவலி அகற்றுமே.
முட்காவேளை காயவைத்துப் பொடி செய்து உண்ணாமல் குடிநீரிலிட்டுக் குடிக்கவும். இதனால் கழிச்சல், காசம், சுரங்கள் என்பன நீங்கும். இது காய கற்ப மூலிகைகளில் ஒன்றாகும்.ஆதண்ட வலியைப் போக்கும்.
0 Comments