"நல்லகத்தி வேரதனை நாடுங்கால் மேகமெனும்
சொல்லகலுந் தாகமறும் தோகையே!-மெல்லமெல்ல
மெய்யெரிவு கையெரிவு மேகனத்தி னுள்ளெரிவும்
ஐயெரிவும் போமென் றறி."
அகத்தி வேர்ப்பட்டையை, விதிப்படி ஊறல் அல்லது குடிநீராக செய்து உட்கொள்ள மேகம், நீர்வேட்கை, உடலெரிவு, கை எரிவு, ஆண்குறியினுள் எரிவு, ஐம்பொறிகளைச் சேர்ந்த எரிவு ஆகியவைகளைப் போக்கும்.
செவ்வகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தன் வேர் இரண்டையும் ஓர் அளவாக எடுத்து அரைத்து, வாதவீக்கத்திற்கும், கீல்வாயுக்களுக்கும் பற்றிடலாம்.
0 Comments